கேள்வி கேட்டு.. கேள்வி கேட்டு ஸ்டாலின் பிரச்சாரம்
தேனி:
ஜெயலலிதா பாணியிலேயே பொதுமக்களிடம் கேள்வி கேட்டு பதில் சொல்ல வைக்கும் பாணியை ஸ்டாலின்ஆண்டிப்பட்டி பிரச்சாரத்தில் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் கேள்வி கேட்டு பதில் சொல்லவைக்கும் புதிய பிரச்சார முறையை கையாண்டார்.
இந்த பிரச்சார முறை பொதுமக்களின் வரவேற்பை பெற்று, அதிமுக அமோகமாக வெற்றி பெற்றது. தற்போதுஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் ஸ்டாலினும் இதே முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
2 தினங்களுக்கு முன்பு முதல்வர் பன்னீர்செல்வம் பெரியகுளம் யூனியனில் பிரச்சாரம் செய்யும்போது, திமுகஆட்சியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யவில்லை, எனக்கு பிறகு ஸ்டாலின் இங்கு வரும் போது இந்தபகுதியில் உங்கள் ஆட்சியில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேளுங்கள் என்று கூறினார்.
அந்த பகுதிக்கு ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய வந்தார். அப்போது முதல்வர் கேள்வி கேட்டது பற்றி அவரிடம்தெரிவிக்கப்பட்டது. பிறகு ஸ்டாலின் பேசும் போது, இந்தப்பகுதியில் சோத்துப்பாறை அணைக்கட்டு யார் காலத்தில்கட்டப்பட்டது?
ரூ.1 கோடி மதிப்பில் வராக நதிப் பாலம் யார் ஆட்சியில் வந்தது? என கூடியிருந்த மக்களைப் பார்த்து கேட்டார்.அதற்கு அங்கு கூடியிருந்த மக்கள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்று கூறினர்.
இந்த தொகுதியில் திமுக வெற்றி பெறுவதன் மூலம் ஆட்சியில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. ஆளுங்கட்சியினர்செய்யும் தவறுகளை திருத்திக் கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். எனவே திமுகவை வெற்றி பெறசெய்யுங்கள் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications