அதிரடிப்படையினர் அட்டூழியம்: சதாசிவம் கமிஷன் விசாரணை தொடர்ந்து நடக்கும்
சென்னை:
வீரப்பனைத் தேட நியமிக்கப்பட்டுள்ள அதிரடிப்படை வீரர்கள் மலைப் பகுதி மக்களுக்கு செய்த கொடுமைகள் குறித்த புகார்களைவிசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சதாசிவம் கமிஷனின் முதல்கட்ட விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது.
ஆனால், தொடர்ந்து கமிஷன் விசாரணை நடத்தும் என நீதிபதி சதாசிவம் அறிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள், அதிகாரிகள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மிக நீண்டபுகார்களைக் கொடுத்துள்ளனர். அவை அனைத்தும் மிகத் தீவிரமானவை. இவற்றை முழுமையாகவும், விரிவாகவும் விசாரிக்கவேண்டியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் 14 பேரிடம் மட்டுமே வாக்குமூலம் பெற முடிந்தது.
பாதிக்கப்பட்டவர்களை மொத்தமாக வரவழைத்து இந்த வாக்குமூலத்தைப் பெற முடியாது. காரணம், ஒவ்வொருவரும் தனிப்பட்டமுறையில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சம்பவங்கள் நடந்தது 1992ல். ஆனால் அப்போது பணியில் இருந்த பல காவல்துறை அதிகாரிகள் இப்போது ஓய்வு பெற்று விட்டனர்.எனவே பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தை முழுவதுமாக பதிவு செய்ய வேண்டியுள்ளது.
மறுபடியும் கமிஷன் விசாரணை நடத்தும் வாய்ப்பு உள்ளது. இதற்காக தேசிய மனித உரிமை ஆணையத்துக்குக் கோரிக்கை விடுத்துக் கடிதம்எழுதுவேன் என்றார் அவர்.
இதற்கிடையே, கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த சதாசிவம் கமிஷனின் விசாரணை வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்தமூன்று நாட்களிலும் அதிரடிப்படை வீரர்கள், அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சோகக் கதைகளை கண்ணீருடன் கமிஷன் முன்தெரிவித்தனர்.
இவற்றில் பெரும்பாலானவை கற்பழிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications