கேப்டனை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் தற்கொலை
சிலிகுரி:
சிலிகுரி அருகே ராணுவப் பயிற்சி முகாமில் ராணுவ வீரர் ஒருவர் கேப்டனை சுட்டுக் கொன்றுவிட்டு தானும்தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி அருகே பக்டோக்ரா அருகே சிறப்பு ராணுவத்தின் 7வது விகாஸ் ரெஜிமெண்ட்அலுவலகம் உள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அந்த அலுவலகத்தில் ராணுவ கேப்டன்கள் எஸ். ஸ்ரீனிபாஷும்,குர்தீப் சிங்கும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஷெரிங் நாபு என்ற ராணுவ வீரர் ஏகே-47 ரக துப்பாக்கியால் திடீரென்று ஸ்ரீநிபாஷையும்குர்தீப் சிங்கையும் சுட்டார். பிறகு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தாக்குதலில் நெற்றியில் குண்டு பாய்ந்த கேப்டன் ஸ்ரீனிபாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வயிற்றில்குண்டு பாய்ந்த குர்தீப் சிங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவரதுஉடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் பற்றி ராணுவ அதிகாரிகளிடம் கேட்டதற்கு, தேச நலன் கருதி காரணத்தைக் கூறமுடியாது என்று மறுத்து விட்டனர்.












Click it and Unblock the Notifications