கோவை குண்டு வெடிப்பு வழக்கு: கைதிகள் உண்ணாவிரதம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் குண்டு வெடிப்பு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்று கோரி இவ்வழக்கில் கைதாகிசிறையில் வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒரு பிரிவினர் இன்று (திங்கள்கிழமை) முதல் திடீரென்றுகாலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.
கோயம்புத்தூரில் கடந்த 1998ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு காரணமாக 168 பேர் கைதுசெய்யப்பட்டு, கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 30 கைதிகள் திடீரென்று இன்று காலை தங்களுக்கு வழங்கப்பட்ட உணவைப் பெற்றுக் கொள்ளமறுத்தனர்.
தங்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்கும் வரை இனி சாப்பிடப் போவதில்லை என்றும் கூறி உண்ணாவிரதப்போராட்டத்தைத் துவக்கினர்.
மேலும் குண்டு வெடிப்பு வழக்கில் நேரடியாகத் தங்களுடைய தொடர்பு இல்லை என்றும் எனவே முக்கியக்குற்றவாளிகளின் பட்டியலில் இருந்து தங்களைத் தனியாகப் பிரித்தெடுக்க வேண்டும் என்றும் அந்த 30குற்றவாளிகள் கோரிக்கை விடுத்தனர்.
தங்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று 30 குற்றவாளிகளும் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கானநிபந்தனைகளை விதித்துள்ளனர்.
இந்த 30 கைதிகளின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், கோயம்புத்தூர் தனிநீதிமன்றத்திற்கும், புலனாய்வுத் துறைக்கும், சிறப்புப் புலனாய்வுக் குழுவினருக்கும் சிறை அதிகாரிகள்அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications