கோவையில் போலி சாமியாரின் பலே திருட்டு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூருக்கு அருகே மாங்கல்ய பூஜை செய்வதாகக் கூறிய போலிச் சாமியார் ரூ.50,000 மதிப்புள்ளநகைகளைத் திருடிக் கொண்டு தப்பினார்.
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா. இவரது வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை ஒருசாமியார் வந்துள்ளார்.
வசந்தாவிடம் உங்களுக்கு தாலி தோஷம் உள்ளது. எனவே அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்றுகூறியுள்ளார். ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள வசந்தா இதைக் கேட்டு பயந்து போனார். பரிகாரத்தை செய்யுமாறுசாமியாரிடம் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து வீட்டிலுள்ள நகைகள் அனைத்தையும் கொண்டு வருமாறு வசந்தா மற்றும் அவரது மகளிடம் சாமியார்கூறியுள்ளார். அவர்களும் அதன்படியே சுமார் 15 பவுன் நகைகளைக் கொண்டு வந்து சாமியாரிடம்கொடுத்துள்ளனர்.
அதன் பிறகு நீங்கள் இருவரும் புதிதாக டிரஸ் செய்து கொண்டு வாருங்கள், பூஜையை ஆரம்பிக்கலாம் என்றுகூறியுள்ளார் சாமியார். அவர்களும் யோசிக்காமல் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்து பார்த்தால் அங்கு சாமியாரும் இல்லை, அவர்கள் கொடுத்த நகைகளையும்காணவில்லை.
இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. நகைகளை அபேஸ் செய்து கொண்டு தப்பியபலே சாமியாரை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications