கருணாநிதிக்கு விருந்தில்லம் மறுப்பா? - வாசன் ஆவேசம்
புதுக்கோட்டை:
திமுக தலைவர் கருணாநிதி தங்குவதற்காகப் பதிவு செய்யப்பட்ட திண்டுக்கல் விருந்தினர் மாளிகை அறை தமிழகஅரசால் ரத்து செய்யப்பட்டதற்கு தமாகா தலைவர் வாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் தமாகா செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட வாசன் பின்னர் நிருபர்களிடம்கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் கருணாநிதி தங்குவதற்காகப் பதிவு செய்யப்பட்டதிண்டுக்கல்-குடகனாறு விருந்தினர் மாளிகை அறையை பின்னர் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனர்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டனத்துக்குரியது. தமாகாவும் இதை வன்மையாகக் கண்டிக்கிறதுஎன்றார் வாசன்.
முன்னதாகத் தமாகாவின் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வாசன், இயக்கமும் பொதுவாழ்க்கையும் நமக்கு 2 கண்கள் போன்றவை என்று கூறினார்.
பொதுமக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அக்கறை வேண்டும் என்று தமாகா தொண்டர்களிடம் கேட்டுக்கொண்ட வாசன், அவர்கள் தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications