மர்ம மிருகம் பிடிபட்டால்தான் வண்டலூர் பூங்கா திறப்பு
சென்னை:
சென்னை வண்டலூர் உயியல் பூங்காவிற்குள் நடமாடுவதாக கூறப்படும் மர்ம மிருகம் பிடிபடும் வரைபார்வையாளர்களுக்காக பூங்கா திறக்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது.
வண்டலூர் பூங்காவிலிருந்து சிங்கம் தப்பியதாக முதலில் கூறப்பட்டது. பிறகு வெளியில் இருந்து யாரோ இங்குகொண்டு வந்து விட்டதாக மிருகக்காட்சி சாலை இயக்குனர் கூறினார்.
"கண்ணாமூச்சி" ஆடிக்கொண்டிருக்கும் மிருகம் சிங்கம் அல்ல என்று பின்னர் கூறப்பட்டது. தற்போது அது சிறுத்தைஎன்று தெரிய வந்துள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெவித்துள்ளனர்.
இதுவரை அந்த மர்ம மிருகம் யாரிடமும் பிடிபடாமல் உள்ளது.
மர்ம விலங்கு காரணமாக பூங்கா கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மூடிக் கிடக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள்பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதையடுத்து பூங்காவைத் திறக்கலாம் என்று பூங்கா அதிகாரிகள் முடிவுசெய்தனர்.
ஆனால் மிருகம் பிடிபடும் வரை பூங்காவைத் திறக்க வேண்டாம் என மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனவளத் துறைஅமைச்சகத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாகத் தெரிகிறது.
இதையடுத்து மிருகம் பிடிபடும் வரை பூங்கா மூடியே கிடக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications