மலிவு விலை மதுவை வாபஸ் பெற மகளிர் கூட்டமைப்பு கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் மலிவு விலை மதுவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய தேசிய மகளிர்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் இந்தக் கூட்டமைப்பின் மாவட்ட மாநாடு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது. அப்போது பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெண்களின் நலனுக்கு உலை வைக்கும் விதமாக அமைந்துள்ள மலிவு விலை மதுவை உடனடியாக தமிழக அரசுவாபஸ் பெற வேண்டும்.
தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். இதனால் அனைத்துத்தொழில் நிறுவனங்களிலும் கண்காணிப்புக் குழுக்களை அரசு அமைக்க வேண்டும்.
பாதிக்கப்படும் பெண்கள் இந்தக் குழுக்களிடம் தங்களது குறைகளைத் தெரிவித்து தீர்வு காண ஏதுவாக அமையும்.
விளம்பரங்கள், திரைப்படங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications