மக்கள் விரோதக் கொள்கையால் ஜெ. தோல்வியடைவார்: பாஜக

Subscribe to Oneindia Tamil

தேனி:

மக்கள் விரோதக் கொள்கைகளைக் கடைபிடிக்கும் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் நிச்சயம் தோல்வியடைவார்என்று பாஜகவின் தமிழகப் பொதுச் செயலாளர் இல. கணேசன் கூறியுள்ளார்.

ஆண்டிப்பட்டியில் திமுகவினரும், பாஜகவினரும் இணைந்து, திமுக வேட்பாளர் வைகை சேகருக்காக கூட்டுப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். புதன்கிழம்ை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், இல.கணேசன் ஆகியோர்பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினர்.

இல.கணேசன்:

அதிமுக அரசு மக்கள் விரோதக் கொள்கைகளையே கடைபிடிக்கின்றனர். அதனால் இந்த தேர்தலில் ஜெயலலிதாநிச்சயமாக தோல்வியடைவார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்களிடையே ஜெயலலிதா பொய்ப் பிரச்சாரம் செய்து வெற்றி அடைந்தார். அவரதுஇந்த யுக்தி இந்த தேர்தலில் எடுபடாது என்று கணேசன் கூறினார்.

அன்பழகன்:

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் போட்டியிடாமல், இந்த தொகுதியில் எம்.எல்.ஏவாகஉள்ளவரை ராஜினாமா செய்ய சொல்லி ஜெயலலிதா போட்டியிடுகிறார்.

இதனால் இங்கு வெற்றியடைந்த தங்கதமிழ் செல்வன் மக்களின் தீர்ப்பை ஏற்று செயல்படாமல் ஏமாற்றி விட்டார்.இவர்களுக்கு மக்கள் நன்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று அன்பழகன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+