தினகரனின் எம்.பி. பதவி செல்லாது என கோரி உயர் நீதிமன்றத்தில் சுவாமி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெரியகுளம் எம்.பியான தினகரனின் பதவி செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரி ஜனதா கட்சியின்தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வழக்குதொடர்ந்தார்.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தானே நேரில் வந்து தாக்கல் செய்த மனுவில் சுவாமி கூறியுள்ளதாவது:

சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ள தினகரன், சென்னை-மயிலாப்பூரில் உள்ள வாக்காளர் பட்டியலில் தன் பெயரைச்சேர்த்துள்ளார்.

இந்நிலையில் அவர் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதால் தினகரன் மக்களவையில் அமருவதற்குத் தகுதியற்றவர்.

எனவே தினகரனின் எம்.பி. பதவி செல்லாது என அறிவித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று சுவாமிதன் மனுவில் கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி சுப்புலட்சுமி ஆகியோர் இந்த வழக்கைஇன்று விசாரித்தனர்.

பின்னர், இது தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கு நடைபெற்று வருவதால் இவ்வழக்கின் விசாரணையை மார்ச் 14ம்தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+