தஞ்சையில் வெளிநாட்டுத் தீவிரவாதியா? - போலீசார் தீவிர விசாரணை
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் வெளிநாட்டுத் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனரா என்று போலீசார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
நாடாளுமன்றம் மீது சமீபத்தில் நடந்த தாக்குதலையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் மாநில போலீசாரும் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கின்றனரா என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 15 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசை உளவுத்துறைஎச்சரித்திருந்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷாருடன் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் ராஜா சுற்றுலா விடுதியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒருவர் அறை எடுத்து தங்கியிருப்பதாகபோலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அவர் வெளிநாட்டுத் தீவிரவாதியாக இருக்கலாம் என்றுஎண்ணினர்.
அந்த வெளிநாட்டவர் தங்கியிருக்கும் விடுதிக்கு போலீசார் சென்று அவரிடம் 2 மணி நேரம் விசாரணை செய்தனர்.ஆனால் அவர் தீவிரவாதியா என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications