கோவையில் அநாதையாக நின்ற கார்: மக்கள் பீதி
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் பரபரப்பு மிகுந்த பகுதியில் அநாதையாக நின்று கொண்டிருந்த ஒரு கார் அந்நகர மக்களிடையேபெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.
கடந்த 2 நாட்களாக அதே இடத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்ட பொதுமக்கள் பீதியடைந்து, போலீசாரிடம்தகவல் கொடுத்தனர்.
சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்தக் காரைச் சொந்தம் கொண்டாடி யாரும் வரவில்லை.
கோயம்புத்தூர் மாநகரம் முழுவதும் மைக் மூலம் போலீசார் அறிவிப்பு செய்த பிறகும், அந்தக்காருக்குரியவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதே பிப்ரவரி 14ல்தான் 1998ம் ஆண்டு கோயம்புத்தூரில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது என்பதால், மக்களின்பீதி இப்போது போலீசாரையும் தொற்றிக் கொண்டது.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்தக் கார் முழுவதுமாகப் பரிசோதிக்கப்பட்டது.
அதில் வெடிகுண்டு போன்ற சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் இல்லை என்று தெரிந்த பிறகு, அந்தக்கார் அருகில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.
பதிவு எண்ணை வைத்து அந்தக் காரின் சொந்தக் காரரைப் போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications