"கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டுள்ள தேர்தல் கமிஷன்"
திருச்சி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் நடக்கும் தேர்தல் விதிமுறைகளை தேர்தல் கமிஷன் என்ன காரணத்தினாலோதொடர்ந்து கண்டுகொள்ளாமலேயே இருந்து வருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று(வெள்ளிக்கிழமை) கூறினார்.
திருச்சியில் நிருபர்களிடம் கருணாநிதி பேசியதாவது:
ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்து வரும் ஜெயலலிதா தொடர்ந்து அரசு நலத் திட்டங்களை அறிவித்து வருகிறார்.
இவை எல்லாமே தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாகும். ஏறக்குறைய தினமும் இதுகுறித்து ஆண்டிப்பட்டிதிமுக வேட்பாளரான வைகை சேகரும் திமுக தலைமையும் தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுத்துக் கொண்டுதான்உள்ளனர்.
ஆனால் என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, நாங்கள் கொடுக்கும் எந்தப் புகாரையும் தேர்தல் கமிஷன் கண்டுகொள்வதே இல்லை. தன்னுடைய கண்களையும் காதுகளையும் அது நன்றாக மூடிக் கொண்டுள்ளது.
ஆண்டிப்பட்டியில் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று தங்கள் தொண்டர்களுக்குப் பிறப்பித்துள்ளஉத்தரவை காங்கிரசும் இந்தியக் கம்யூனிஸ்ட்டும் வாபஸ் பெற வேண்டும் என்றார் கருணாநிதி.
தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதைக் காரணம் காட்டி ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தலை ஒத்திவைக்கநீதிமன்றத்தை நாடுவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, ஏற்கனவே வைகை சேகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில்இது தொடர்பாக ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளார் என்று கருணாநிதி பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications