ஜம்முவில் ஊடுருவ முயன்ற 8 தீவிரவாதிகள் கொலை
ஜம்மு:
ஜம்மு அருகே இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 8 பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால்சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்முவில் உள்ள ரஜவுரி மாவட்டத்தில் உள்ள மென்தார் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 8பாகிஸ்தான் தீவிரவாதிகள் ரகசியமாக ஊடுருவ முயன்றனர்.
ஆனால் அந்த 8 தீவிரவாதிகளையும் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இவர்களின் அடையாளம் பற்றிஇதுவரை எதுவும் தெரியவில்லை.
இதற்கிடையில் நேற்று பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பதியா கிராமத்தில் உள்ள முகமது டாசிம் என்பவரின்வீட்டுக்குள் திடீரென்று புகுந்த தீவிரவாதிகள் அவரை கடத்திச் சென்றனர்.
இதேபோல் ஆர்னாஸ் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு, உதாம்பூரில் உள்ள கிராம பாதுகாப்பு கமிட்டியின்உறுப்பினர் ஆன்கிரஸ் சிங் என்பவர் படுகாயமடைந்தார்.
இதற்கிடையே ரஜவுரி மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர் பகுதியில் மறைந்துள்ள தீவிரவாதி ஒருவனை தேடும் பணியில்பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது, ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் நடவடிக்கைகள் குறித்த முக்கியஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் அந்த இடத்திலிருந்து ஏராளமான வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு:
இந்நிலையில் ஜம்முவில் உள்ள ஜபோவால் பகுதி அருகில் சர்வதேச எல்லைப்பகுதியில் உள்ள கிராம வயல்களில்வேலை செய்து கொண்டிருந்த மக்களை நோக்கி நேற்று (வியாழக்கிழமை) திடீரென்று பாகிஸ்தான் ராணுவத்தினர்சரமாரியாக சுட்டனர்.
இந்த தாக்குதலில் சந்து ராம் (70) என்பவரின் நெஞ்சில் குண்டு பாய்ந்தது. இவரை உடனடியாக மருத்துவமனையில்சேர்த்தனர். ஆனால் அவரது உடல் நலம் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஹிரன்நகர், ஆர்.எஸ்.புரா, சம்பா மற்றும் அக்னூர் பகுதிகளில் சர்வதேச எல்லை அருகே சிறியஅளவில் இந்திய ராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இடையில் நேற்று இரவிலிருந்துதொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications