மதிமுக ஆதரவைக் கோருகிறார் கருணாநிதி
திண்டுக்கல்:
ஆண்டிப்பட்டியில் மதிமுக, புதிய தமிழகம் கட்சிகள் தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டு திமுகவைஆதரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆண்டிப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக, திருச்சியிலிருந்து கிளம்பிய கருணாநிதி வரும்வழியில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஓய்வு எடுத்துக் கொண்டபோது நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அவர் கூறுகையில்,
மதிமுக, புதிய தமிழகம் கட்சிகள் ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி, திமுக வேட்பாளர்வைகை சேகரை ஆதரிக்க வேண்டும்.
அப்படி அவர்கள் ஆதரித்தால் ஆண்டிப்பட்டி தேர்தல் நிலவரத்தில் பெரும் மாற்றம் ஏற்படும், எங்கள்கூட்டணியிலும் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் இடைத் தேர்தல்களிலும் இந்தக் கட்சிகளுடன் கூட்டணிவைத்துக் கொண்டு போட்டியிடவும் தயார் என்றார் கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications