தீவிரவாதிகளை ஒப்படைக்க முடியாது: பாகிஸ்தான் திமிர்
துபாய்:
இந்தியா கேட்டுள்ள 20 தீவிரவாதிகளை ஒப்படைக்க முடியாது என்று பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர்அப்துல் சத்தார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
எல்லையில் இருந்து இந்தியா ராணுவத்தை திரும்ப பெற வேண்டுமானால் பாகிஸ்தான் 20 தீவிரவாதிகளைஒப்படைக்க வேண்டும் என்று தீவிரவாதிகள் பட்டியலை இந்தியா, பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது.
அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல நாடுகள் வற்புறத்தியும் அவர்களை ஒப்படைப்பதில் பாகிஸ்தான் தாமதப்படுத்திவந்தது. இந்நிலையில் இன்று துபாய்க்கு சென்றுள்ள அப்துல் சத்தார் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில்கூறியதாவது:
இந்தியா மீது தீவிரவாதிகள் தாக்கியதற்கும், இந்த 20 தீவிரவாதிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால்அவர்களை பாகிஸ்தான் ஒப்படைக்காது.
இந்த 20 தீவிரவாதிகள் குறித்து பாகிஸ்தானும், பிற நாடுகளும் ஆய்வு செய்தது. அதில் இந்த தீவிரவாதிகள் 20ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
எனவே இவர்களை ஒப்படைக்க வேண்டுமானால் அந்த பட்டியலை சார்க் கூட்டமைப்பிடம் கொடுத்து முறையாகஅவர்களை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுக்க வேண்டும்.
அதன் பிறகு சார்க் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் என்று அப்துல் சத்தார் கூறினார்.












Click it and Unblock the Notifications