பின்லேடன் பாகிஸ்தானில் தான் இருக்கிறான்: வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
லக்னெள:
பின் லேடனும், முல்லா ஒமரும் பாகிஸ்தானில் தான் பதுங்கியிக்க வேண்டும் என பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
லக்னெளவில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதாக அமெரிக்காவில் இருந்தபோது பாகிஸ்தான் அதிபர் முஷாரப்கூறினார். இதை அமெரிக்கா மறுத்தது. அதன் பிறகு முஷாரப் வாயே திறக்கவில்லை. இதனால், அவர்நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்.
தீவிரவாதிகளான பின்லேடனும், முல்லா ஒமரும் பாகிஸ்தானில் தான் மறைந்திருக்க வேண்டும். அவர்களை உலகம்முழுவதும் தேடுவதைவிட்டுவிட்டு பாகிஸ்தானில் தேடலாம். ஏனென்றால் தீவிராவாதிகளுக்கு பாதுகாப்பானநாடே பாகிஸ்தான் தான்.
இந்த இருவருக்கும் பாகிஸ்தான் அரசியல் தஞ்சம் தர முயலலாம். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்வாஜ்பாய்.












Click it and Unblock the Notifications