காஷ்மீரில் தீவிரவாதிகளால் 8 இந்துக்கள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
காஷ்மீரில் 4 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 8 இந்துக்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
ரஜெளரி மாவட்டத்தில் உள்ள பம்பல்-நர்லா என்ற கிராமத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு இந்தத் துயரச் சம்பவம்நடந்தது.
பயங்கரமான ஆயுதங்களுடன் இந்தக் கிராமத்தில் திடீரென்று புகுந்த சில தீவிரவாதிகள், அங்கிருந்த 3இந்துக்களின் வீடுகளைத் தாக்கினர்.
பின்னர் அங்கு உள்ளவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டுவிட்டு அந்தத் தீவிரவாதிகள்ஓடிவிட்டனர்.
இச்சம்பவத்தில் 4 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
வேறு 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சில பேர் கவலைக்கிடமாகஉள்ளனர்.












Click it and Unblock the Notifications