தர்மபுரி அருகே லாரி-கார் மோதல்: 3 பேர் பலி
தர்மபுரி:
தர்மபுரி அருகே காருடன் மினி லாரி மோதியதில் 3 பேர் இறந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வர்ணதீர்த்தம் கிராமத்தைச் சேர்நத ஓவியர் பூபதி (21). இவருடன் அரூரைச்சேர்ந்த மீரா மீனாட்சி (20), கணேசன் (21), பழனி (22), சேடு (25) ஆகியோர் புதுப்பட்டியில் உள்ள நண்பரின்திருமணத்திற்கு செல்வதற்காக சனிக்கிழமை இரவு காரில் சென்றனர்.
காரை சேடு ஓட்டிச் சென்றார். அப்போது புதுப்பட்டி அருகே எதிரே வந்த மினி லாரி கார் மீது பலமாக மோதியது.இதில் சம்பவ இடத்திலேயே பூபதி, சேடு ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் பழனி இறந்தார்.
படுகாயம் அடைந்த மீனாட்சி, கணேசன் ஆகியோர் சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல்அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு அருகே பஸ்-வேன் மோதி 2 பேர் பலி:
இதற்கிடையே களக்காடு அருகே பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ஒருஅரசு பஸ் புறப்பட்டுச் சென்றது. இந்த பஸ் களக்காடு அருகே வந்த போது எதிரே வந்த வேனுடன் நேருக்கு நேர்மோதியது.
இந்த விபத்தில் வேன் நொறுங்கியது. இந்த விபத்தில் வேன் டிரைவர் ராஜேந்திரன், லோடுமேன் பால்ராஜ்ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மரணமடைந்தனர்.
வேனில் பயணம் செய்த மற்ற 9 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டைமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications