ஆபாசப்படத்தில் கோலிவுட் நடிகைகள்: நர்ஸ் வாக்குமூலம்
சென்னை:
டாக்டர் பிரகாஷ் எடுத்த ஆபாசப்படங்களில் நடித்த நடிகைகள் யார் என்பதை போலீசாரிடம் நர்ஸ் சித்ராஅடையாளம் காட்டினார்.
பெண்கள், நடிகைகள், இளைஞர்களை வைத்து ஆபாசப்படம் எடுத்த பிரகாஷிடம் நர்ஸாக வேலை பார்த்தவர்சித்ரா. போலீசில் சரணடைந்த இவரிடம் கடந்த 4 நாட்களாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் டாக்டர் பிரகாஷ் யாரையெல்லாம் ஆபாசப்படம் எடுத்துள்ளார் என்றும் அவர்களில் ஆண்கள் யார்,பெண்கள் யார் என்றும் பல்வேறு கேள்விகளை சித்ராவிடம் போலீசார் கேட்டு வருகின்றனர்.
விசாரணையின்போது நிர்வாணப் படங்களில் நடித்த நடிகைகளின் படங்களையும் சித்ராவிடம் காட்டினர்.அவர்களில் டாக்டர் பிரகாஷின் நிர்வாணப் படங்களில் நடித்த நடிகைகளை சித்ரா காட்டினார்.
அந்த நடிகைகளுடன் டாக்டர் பிரகாஷூக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்தும் அவருக்கு நடிகைகளைஅறிமுகப்படுத்தியது யார் என்பது குறித்தும் பல்வேறு கேள்விகளுக்கு சித்ரா பதில் அளித்துள்ளார்.
இந்த நடிகைகள் யார் என்ற விபரத்தை தர போலீசார் மறுத்து விட்டனர். அந்த நடிகைகளிடம் விசாரணை நடத்தவும்முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து பல நடிகைகள் கைதாகலாம் என தெரிகிறது. இதனால் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பல நடிகைகள் பீதிஅடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications