Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடாளுமன்றத் தாக்குதலிலும் ஷேக் ஒமருக்கு தொடர்பு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

கராச்சியில் அமெரிக்க நிருபரான டேனியல் பேர்ல் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ஷேக் ஒமர்,இந்திய நாடாளுமன்றத் தாக்குதலிலும் கொல்கத்தா அமெரிக்க மையத் தாக்குதலிலும் தனக்குத் தொடர்புஉள்ளதாகக் கூறியுள்ளான்.

ஜெய்ஷ்-ஏ-முகமது என்ற தீவிரவாத அமைப்பை மெளலானா மசூத் அசாருடன் உருவாக்கிய ஷேக் ஒமர், இந்தியஎம்.பிக்களைப் பணயக் கைதிகளாக வைத்து அங்குள்ள சிறைகளில் உள்ள தீவிரவாதிகள் அனைவரையும்விடுதலை செய்யவைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே நாடாளுமன்றத்தைத் தாக்கத் திட்டமிட்டதாகவும்ஒமர் கூறியுள்ளான்.

டேனியல் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் போலீசாரின் காவலில் உள்ள ஷேக் ஒமர்,இத்தகைய வாக்குமூலத்தை அளித்துள்ளதாக பாகிஸ்தானில் வெளியாகும் "தி நியூஸ்" என்ற ஆங்கில நாளிதழில்கூறப்பட்டுள்ளது.

சர்வதேசத் தீவிரவாதியான ஒசாமா பின் லேடனுடனும் கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத் தாக்குதல்தொடர்பாக துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்ட அப்தாப் அன்சாரியுடனும் தனக்குநெருங்கிய தொடர்பு உண்டு என்றும் ஷேக் ஒமர் கூறியுள்ளான்.

அமெரிக்காவில் செப்டம்பர் 11ல் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் உள்ளஜலாலாபாத்துக்குச் சென்று பின் லேடனை நேரடியாகவே 2 முறை தான் சந்தித்ததாகவும் ஷேக் ஒமர் தன்னுடையவாக்குமூலத்தில் கூறியுள்ளதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி காஷ்மீர் சட்டசபை வளாகத்தில் கார் குண்டு மூலம் தற்கொலைத்தாக்குதலை நடத்தியவன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன்தான் என்றும் ஷேக் ஒமர் தெரிவித்துள்ளான்.

கராச்சியில் கடந்த ஜனவரி 23ம் தேதி கடத்தப்பட்ட டேனியல், அடுத்த சில நாட்களிலேயே கடத்தல்காரர்களால்சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாகவும் போலீசாரிடம் ஷேக் ஒமர் தெரிவித்துள்ளான். ஆனால் போலீசார் இதை நம்பமறுத்துவிட்டனர்.

பாக். மறுப்பு:

இதற்கிடையே இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் தனக்கும் பங்குள்ளதாக ஷேக் ஒமர் வாக்குமூலம் அளித்துள்ளதகவல் தவறானது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இந்தச் செய்தி வெளியாகியுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறைசெய்தித் தொடர்பாளரான ஆசிஸ் அகமது கான் நிருபர்களிடம் கூறினார்.

ஷேக் ஒமரை விசாரிக்க விரும்பும் அமெரிக்கா:

இந்நிலையில் பாகிஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ஷேக் ஒமரை விசாரிக்க விரும்புவதாகஅமெரிக்கா தெரிவித்துள்ளது.

விரைவில் ஷேக் ஒமரை அமெரிக்க போலீசார் விசாரிப்பார்கள் என்றும் தெரிகிறது.

மேலும் ஷேக் ஒமர் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்பதால், இங்கிலாந்து போலீசாரும் அவனைவிசாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் தாக்குதல் நடத்த விரும்பும் தீவிரவாதி:

இதற்கிடையே டேனியல் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ஒரு தீவிரவாதி, இந்தியாவில்தற்கொலைத் தாக்குதல் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

"விசாரணையின் முடிவில் எனக்கு எப்படியும் மரண தண்டனை கொடுப்பீர்கள். அதற்குப் பதிலாக காஷ்மீர் அல்லதுஇந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் என்னைத் தற்கொலைத் தாக்குதல் நடத்த அனுமதியுங்கள்" என்று திமிருடன்கோரியுள்ளதாகத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+