ரேஷன் கார்டு குளறுபடிகள் சரி செய்யப்படும்: ஜெ. உறுதி
தேனி:
ரேஷன் கார்டுகளில் உள்ள குளறுபடிகள் உடனடியாக சரி செய்யப்பட்டு, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்என்று ஆண்டிப்பட்டி தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெயலலிதா வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆண்டிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 1984ம் ஆண்டு மறைந்த எம்.ஜி.ஆர். இதே தொகுதியில் வெற்றி பெற்று, பல்வேறு வளர்ச்சிப் பணிகளைசெய்தார். அவர் விட்டுச் சென்ற சில பணிகளை நான் தொடர்ந்திட எனக்கு வாக்களியுங்கள்.
நான் வெற்றி பெற்றால் ரேஷன் கார்டுகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு புதிய கார்டுகள்வழங்கப்படும்.
ரோடு, கழிப்பிடம், சாலை மேம்பாடு, பள்ளி வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்படும். ரேஷன் அரிசிவிலை உயரவே உயராது.
மல்லப்புரம் மலைப்பாதை சரி செய்யப்படும். வெள்ளிமலை ரோடு செப்பனிடப்படும். முந்திரித் தொழிற்சாலை,இலவம்பஞ்சு தொழிற்சாலை அமைக்கப்படும் என்று பிரச்சாரத்தின் போது ஜெயலலிதா கூறினார்.












Click it and Unblock the Notifications