சட்டம்-ஒழுங்கு சீராக இருந்தால் திமுக வெற்றி உறுதி: கருணாநிதி
சென்னை:
ஆண்டிப்பட்டியில் சட்டம்-ஒழுங்கு சீராக இருந்தால் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர்கருணாநிதி கூறினார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை திரும்பியகருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் சட்டம்-ஒழுங்கு மற்றும் தேர்தல் விதிமுறைகள் ஒழுங்காகக் காப்பாற்றப்பட்டால் அங்கு திமுகவெற்றி பெறுவது உறுதி.
நேர்மையாகவும் நடுநிலைமையுடனும் செயல்பட்டால் இப்போதைய பாதுகாப்புப் படையின் பலமே போதும்.
தேர்தலின்போது அதிமுகவினர் வன்முறை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக எங்கள் தொண்டர்கள் தகவல்தந்துள்ளனர். அதைப் போலீசார் பார்த்துக் கொள்வார்கள். எங்கள் கட்சியினரும் தாங்கிக் கொள்வார்கள்.
தேர்தலைப் புறக்கணித்துள்ள கட்சிகளிடம் மறுபரிசீலனை செய்யும்படி கூறினேன். கேட்பது எங்கள் கடமை.
அவர்கள் தங்களுடைய சூழ்நிலையைக் கூறியுள்ளனர். அப்படிச் சொல்பவர்களைக் கண்டிக்க முடியாது. முடியாதுஎன்று சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.
ஆண்டிப்பட்டியில் திமுகவை ஆதரித்தால் சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சரப்பாக்கம்இடைத்தேர்தலில் "அட்ஜஸ்ட்" செய்து கொள்ளலாம் என்று என்னுடைய கருத்தைக் கூறினேன்.
ஆனால் பதிலுக்கு அவர்களுடைய கருத்தைக் கூறுவதாகச் சொல்லி என் மீது சீறி விழுந்துள்ளனர். நான்வைகோவை மண்டியிடவும் கூறவில்லை. காலில் விழவும் சொல்லவில்லை. நான் அப்படியெல்லாம்சொல்லமாட்டேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications