கற்பழிக்கப்பட்ட 8ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூர் அருகே கற்கழிக்கப்பட்டதால் ஏற்பட்ட அவமானம் தாங்காமல் 8ம் வகுப்பு பள்ளி மாணவி தீக்குளித்தார்.

கடலூர் மாவட்டம் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவருக்கு 8ம் வகுப்பு படிக்கும் கவுரி என்றபெண் உள்ளார்.

அன்பழகனின் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால், இவர் ஜோதி என்ற பெண்ணை 2வதுதிருமணம் செய்து கொண்டார்.

ஜோதியின் உறவினரான சங்கர் என்பவர் அடிக்கடி கவுரி வீட்டுக்கு வருவார். சங்கருக்கு கவுரி மீது நீண்டநாளாகவே ஒரு கண் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கவுரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதைத் தெரிந்து கொண்ட சங்கர்,வீட்டிற்கு வந்து கவுரியை பலவந்தமாக கற்பழித்து விட்டு ஓடி விட்டார்.

இது குறித்து தனது பள்ளி ஆசிரியையிடம் கவுரி தெரிவித்தார். அவரும் இதுகுறித்து கவுரியின் தந்தையிடம்கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த கவுரியின் தந்தை கவுரியைக் கோபத்துடன் திட்டியுள்ளார்.

இதனால் அவமானமடைந்த கவுரி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது,தன் உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து கவுரியின் இந்த செயலுக்கு காரணமான சங்கரைக் கைதுசெய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+