வீரப்பனின் மாமனார், மைத்துனரிடம் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை
மேட்டூர்:
சந்தனமரக் கடத்தல் வீரப்பனின் மாமனார், மைத்துனரிடம் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது அவரை விடுவிக்க தமிழக, கர்நாடக அரசுகள் வீரப்பனுக்குபணம் கொடுத்ததாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளி சேத்துக்குளி கோவிந்தன் ஆகியோரின் உறவினர்கள்வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தி அவர்களிடமிருந்து 500 ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
காட்டில் உள்ள வீரப்பன் தன் உறவினர்களுக்கு இந்த பணத்தை கொடுத்தது தெரிய வந்தது. இது தொடர்பாகவீரப்பன், மற்றும் சேத்துக்குளியின் உறவினர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.30லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பென்னாகரம் அருகே உள்ள நெருப்பூருக்கு கர்நாடக அதிரடிப்படை போலீசார் சென்றனர். அவர்கள்வீரப்பனின் மாமனார் பூசாரி (60), மைத்துனர் செங்கோடன் ஆகியோரை கைது செய்து கூட்டிச் சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர்களை கர்நாடக மாநிலத்தில் ரகசிய இடத்தில் வைத்து அதிரடிப்படையினர் விசாரித்துவருகின்றனர்.
இதற்கிடையே மாதேஸ்வரன் மலையில் உள்ள காட்டுப் பகுதியில் ஆதிவாசி மக்கள் வசிக்கும் கொஞ்சி கல்லுகொடு என்ற பகுதியில் 4 பேர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடமாடி உள்ளது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் கெம்பையா தலைமையில் அதிரடிப் போலீசார் அந்த பகுதியில்முற்றுகையிட்டு, வீரப்பனை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications