ஜெ.க்கு ஆசி வழங்கிய 100 வயது முதியவர்கள்
தேனி:
ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதாவுக்கு அதைப் பார்க்க வந்திருந்த முதியவர்கள் ஆசிர்வாதம்வழங்கினர்.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா மேற்கொண்டிருக்கும் சூறாவளிப் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொருகிராமத்திற்கும் செல்லும் அவர் அங்குள்ளவர்களின் மனதைக் கவரும் விதத்தில் பிரச்சாரம் செய்கிறார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ஜம்புலி புதூர் வழியாக அவர் சென்று கொண்டிருந்தபோது ஒரு இடத்தில்ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்களில் பலர் வயதான முதியவர்கள். ஒரு சிலருக்கு வயது 100க்கும்மேலிருக்கும்.
அந்த முதியவர்களைப் பார்த்ததும் காரை நிறுத்தச் சொன்ன ஜெயலலிதா காலிருந்து இறங்கி அவர்களிடம்சென்றார். அவர்கள் அருகே சென்ற ஜெயலலிதா கைகளைக் கூப்பி தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஜெயலலிதாவை அருகில் பார்த்ததும் உற்சாகம் அடைந்த முதியவர்கள், உங்களுக்குத்தான் எங்கள் ஓட்டு, நீங்கநல்லா இருக்கணும் என்று கூறி ஆசி வழங்கினர்.
அதன் பின்னர் சிரித்த முகத்துடன் மீண்டும் காருக்குத் திரும்பிய ஜெயலலிதா அங்கிருந்து கிளம்பினார்.












Click it and Unblock the Notifications