பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த 2 இந்து முன்னணியினர் கைது
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலத்தில் பிள்ளையார் சிலையை உடைத்த வழக்கில் இந்து முன்னணியைச் சேர்ந்த 2 பேரை போலீசார்கைது செய்தனர்.
சத்தியமங்கலத்தில் உள்ள சதுமுகையில் சில தினங்களுக்கு முன்பு பிள்ளையார் கோவிலில் உள்ள பிள்ளையார்சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டும்அவமதிக்கப்பட்டன.
இந்தச் செயலை செய்தவர்களை உடனே கைது செய்யுமாறு அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு கோரிக்கைவிடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசில் தனிப்படை அமைக்கப்பட்டு ரகசியமாக விசாரணைநடத்தப்பட்டது.
சதுமுகையைச் சேர்ந்த சிலர் கொடுத்த தகவலின் பேரில் சதுமுகையில் நெசவுத் தொழில் செய்து வரும் மஞ்சுநாதன்(17) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் மஞ்சுநாதன் கூறியதாவது:
நான் இந்து முன்னணி தீவிர உறுப்பினர். அடுத்த மாதம் 4ம் தேதி சதுமுகையில் பெரியார் திராவிடர் கழகக் கூட்டம்நடப்பது எனக்கு தெரிய வந்தது.
இதை எப்படியும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி ஒன்றிய இணை அமைப்பாளர்செல்வக்குமாரிடம் ஆலோசனை கேட்டேன்.
அவர் தான் பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலை போட்டு குழப்பத்தை ஏற்படுத்தினால் கூட்டத்துக்குத் தடைபோட்டு விடுவார்கள் எனக் கூறினார். அதனால் தான் அப்படி செய்தேன் என்று மஞ்சுநாதன் போலீசிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து செல்வக்குமாரையும், மஞ்சுநாதனையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை கோயம்புத்தூர் சிறையில் மார்ச் 1ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இருவரும் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெரியார் திராவிடர் கழகம் கண்டனம்:
இதற்கிடையே இந்தச் சம்பவத்திற்கு பெரியார் திராவிடர் கழகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம்தெரிவித்துள்ளன.
கடவுளின் பெயரால் வகுப்புக் கலவரத்தை உருவாக்க முயலும் இந்து முன்னணியைத் தடை செய்ய வேண்டும்என்று பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் இளங்கோ கூறியுள்ளார்.
சுவாமி சிலைகளை உடைத்து, பிற மதத்தினர் மீதும் பிற இயக்கத்தினர் மீதும் பழி சுமத்தும் வேலையை இந்துமுன்னணி தொடர்ந்து செய்து வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications