இளங்கோவனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது: தங்கபாலு
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவரான இளங்கோவன் தன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்று அக்கட்சியின்முன்னாள் தலைவரான கே.வி. தங்கபாலு கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டியில் அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டியது தமிழக காங்கிரசின் தார்மிகக் கடமையாகும் என்றுசமீபத்தில் தங்கபாலு கூறியிருந்தார்.
இதையடுத்து அவர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, இதுகுறித்து பதிலளிக்கும்படிதங்கபாலுவுக்கு இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீசுக்கு ஒரு வாரத்திற்குள் தங்கபாலு பதிலளிக்கவில்லை என்றால் அவர் மீது கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும் இளங்கோவன் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இளங்கோவனின் இந்த நடவடிக்கைக்கு தங்கபாலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்துஅவர் நேற்று (திங்கள்கிழமை) இரவு நிருபர்களிடம் கூறியதாவது:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எதிராகச் செயல்படும் இளங்கோவன், கட்சி விரோதச் செயல்களிலும்ஈடுபட்டு வருகிறார்.
என் மீது நடவடிக்கை எடுக்கவோ எனக்கு நோட்டீஸ் அனுப்பவோ இளங்கோவனுக்கு எந்தவிதமான அதிகாரமும்கிடையாது என்று தங்கபாலு கூறினார்.












Click it and Unblock the Notifications