எல்லையில் படைகள் வாபஸ் இல்லை: பெர்னாண்டஸ்
டெல்லி:
மத்திய அரசின் நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றும் வரையில், எல்லையிலிருந்து படைகளை திரும்பபெறும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று ராணுவ பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்கூறினார்.
நாடாளுமன்றம் தாக்கப்பட்டதை தொடர்ந்து எல்லையில் இந்திய ராணுவத்தினர் எதற்கும் தயார் என்ற நிலையில்குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் நிறுத்தப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் போர் எதுவும் இல்லாததால், ராணுவ வீரர்கள்அலுப்படைந்து வருவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது.
டெபெக்ஸ்போ-2002 தொடக்க விழாவில் கலந்து கொண்ட பெர்னாண்டஸ், இதற்கு பதிலளிக்கும் வகையில்நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய ராணுவம் எல்லையிலிருந்து திரும்புவதற்காக பாகிஸ்தானுக்கு சில நிபந்தனைகளை நாம் விதித்துள்ளோம்.அவற்றை அந்நாடு நிறைவேற்றும் வரையில் நம் ராணுவம் எல்லையிலேயே இருக்கும்.
ஆனால் எல்லையிலேயே நிறைய நாட்கள் தொடர்ந்து ராணுவப்படை இருப்பற்கோ அல்லது ராணுவத்தை திரும்பபெறுவதற்கோ நிறைய செலவுகள் ஆகும்.
நான் எல்லையிலிருக்கும் வீரர்களை அடிக்கடி சந்தித்து வருகிறேன். அவர்கள் தேசத்துக்காக எதுவும் செய்யும்வகையில் மன உறுதியோடு உள்ளனர்.
இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்பந்தம் செய்த படி, இரு நாட்டு முப்படைகளும் கூட்டாக பயிற்சி மேற்கொள்ளும்.அமெரிக்கா நமக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது என்று பெர்னாண்டஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications