ஜெயின் சாமியார் ஆன 16 வயது மாணவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 16 வயது மாணவி உட்பட 2 பேர் ஜெயின் மத சாமியார் ஆனார்கள்.

இந்தியா முழுவதும் ஏராளமானவர்கள் ஜெயின் மதத்தை பின்பற்றுகின்றனர். இதன் ஸ்தாபகர் மகாவீரரின்கொள்கைகளையும், ஜெயின் மதத்தை பரப்புவதற்கும் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்சாமியார்களும், ஆண் சாமியார்களும் உள்ளனர்.

இவர்களுக்கெல்லாம் தலைமை சாமியாரான கமல்முனே கமலேஷ் சென்னை வந்து இருந்தார். இதையொட்டிஜெயின் மதத்தைச் சேர்ந்த 2 பெண்கள் சாமியார் ஆகும் நிகழ்ச்சி சென்னை குசல்தாஸ் கார்டனில் நடந்தது.

மத்தியபிரதேச மாநிலம் பிரகான்பூரை சேர்ந்த 16 வயதான 10வது வகுப்பு படிக்கும் மாணவியும், மராட்டியமாநிலம் பூஷாவல்லை சேர்ந்த 3 மகள்களுக்கு தாயான சிநேகலதாவும், ஜெயின் மத சாமியார்களானார்கள்.

இந்த 2 பெண்களும் சாமியார் ஆகும் நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான ஜெயின் மத பெண்கள் கூடி இருந்தனர்.அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு 2 பெண்களையும் மணப்பெண்ணை அழைத்து வருவது போல் அழைத்துவந்தனர்.

பிறகு அவர்களை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று அவர்கள் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழற்றிவிட்டு, வெள்ளைப் புடவை அணிவிக்கப்பட்டு மொட்டை அடித்தனர்.

பிறகு அவர்களை அதே மேடைக்கு அழைத்து வந்தனர். பிறகு அவர்கள் அணிந்திருந்த நகைகளை ஏலம் விடும்நிகழ்ச்சி நடைபெற்றது.

பிறகு விழாவில் பேசிய கமல் கமலேஷ் சாமியார், ஜெயின் சாமியார்கள் சென்னையில் தங்க ஆசிரமம் கட்டிகொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+