தமிழகத்தில் தேசிய கட்சிகளை இணைக்க ஜனதா தளம் (எஸ்) முயற்சி
பெங்களூர்:
தமிழகத்தில் சிதறிக் கிடக்கும் தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை மேற்கொண்டு உள்ளேன் என்றுஅகில இந்திய ஜனதா தளம் (எஸ்) கட்சி துணைத் தலைவர் ஜி.ஏ. வடிவேலு கூறினார்.
கர்நாடக மாநிலம் கனகபுரா பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் முன்னாள் பிரதமர்தேவகவுடா போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அகில இந்திய ஜனதா தளம் (எஸ்) கட்சியின் துணைத் தலைவரும், தமிழகதலைவருமான வடிவேலு பெங்களூர் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தேசிய கட்சிகள் பல்வேறு பிளவுகளை சந்தித்து பலவீனமாகி உள்ளது. சிதறிக் கிடக்கும் தேசியகட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொண்டு உள்ளேன்.
தமிழக அரசியலால் வெறுப்படைந்து ஒதுங்கி இருக்கும் தேசியவாதிகளையும் ஒன்றுபடுத்தி புதியதோர் சக்தியைஉருவாக்க முயற்சி மேற்கொள்வேன்.
கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் ஐக்கிய ஜனதா தளம் இணைந்தது போல் தமிழகத்திலும் இணைக்கும்முயற்சி நடந்து வருகிறது.
இன்னும் ஒரு ஆண்டில் ஜனதா தளம் (எஸ்) கட்சி தனக்கென்று தனி இடத்தை தமிழகத்தில் பிடிக்கும் என்றுவடிவேலு கூறினார்.












Click it and Unblock the Notifications