மதுரை அருகே பட்டப் பகலில் ரவுடி வெட்டிக் கொலை
மதுரை:
மதுரை அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) பட்டப் பகலில் ரவுடி ஒருவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டான்.
மதுரை காகாதோப்புத் தெருவைச் சேர்ந்தவன் பிரபல ரவுடி முட்டைக்கண் ரமேஷ். இவன் மீது ஏற்கனவே பலகொலை வழக்குகள் உள்ளன.
இன்று காலை மதுரை அருகே உள்ள உச்சப்பரம்பு கிராமத்தில் ஒரு கடையில் ரமேஷ் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென்று ரமேஷ் மீது நாட்டு வெடிகுண்டுகளை சராமாரியாக எறிந்தது.இதனால் அருகில் இருந்தவர்கள் அனைவரும் தலைதெறிக்க ஓடிவிட்டனர்.
பின்னர் ரமேஷை நோக்கிப் பாய்ந்து வந்த அந்தக் கும்பல், அவனை சராமாரியாக அரிவாளால் வெட்டியது.
பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரமேஷ், மதுரை அரசு மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவன் உயிரிழந்தான்.
பட்டப் பகலில் நடந்த இந்தக் கொலை அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் பீதியையும்ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஊமச்சிகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications