"மின் வாக்குப்பதிவு எந்திரங்களை உடைக்க சதி"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆண்டிப்பட்டி தொகுதியில் நடைபெறவுள்ள தேர்தலின்போது மின் வாக்குப்பதிவு எந்திரங்களை உடைப்பதுஉள்ளிட்ட பல வன்முறைச் செயல்களை நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ்குப்தா இன்று (செவ்வாய்க்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆண்டிப்பட்டியில் நாளை மறுநாள் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம்முடிந்தது.

தேர்தலின்போது வன்முறைச் செயல்களில் ஈடுபட பயங்கரமான சதிச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்என்று திமுகவினரும் அதிமுகவினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

தன்னுடைய 6 நாள் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு இன்று பிற்பகல் சென்னை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளரும் ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளருமான ஜெயலலிதா, தேர்தலின்போது திமுகவினர் பயங்கரமானவன்முறை நடத்த சதித் திட்டங்களைத் தீட்டியிருப்பதாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் புகார் கூறினார்.

இந்நிலையில் நரேஷ் குப்தா இன்று மாலை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் நடக்கும்போது சிலர் பயங்கரமான வன்முறையில் ஈடுபடப் போவதாகத்தகவல் வந்துள்ளது.

இந்த சமூக விரோதிகள் வாக்குச் சாவடிகளுக்குள் பயங்கராமான ஆயுதங்களுடன் புகுந்து தேர்தலைத் தடுக்கத்திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் வாக்குச் சாவடிகளுக்குள் இந்த சமூக விரோதிகள் புகுந்து அங்குள்ள மின்வாக்குப்பதிவு எந்திரங்களைஉடைத்து நொறுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்று அவ்வறிக்கையில் நரேஷ் குப்தா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+