ஆண்டிப்பட்டி தேர்தலை ஒத்திவைக்க கோரும் திமுக வழக்கில் இன்று தீர்ப்பு
டெல்லி:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அத்தொகுதி திமுக வேட்பாளரான வைகை சேகர்தொடர்ந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
ஆண்டிப்பட்டி தொகுதியில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பின்போது ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளனஎன்றும் சுமார் 17,000 போலி வாக்காளர்கள் என்றும் இவை சரிசெய்யப்படும்வரை இத்தொகுதியில் தேர்தலைஒத்திவைக்க வேண்டும் என்று வைகை சேகர் தன் மனுவில் கூறியிருந்தார்.
தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு, தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளில் யாரும் தலையிடக்கூடாது என்றும்இதுகுறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளன என்றும் தேர்தல் கமிஷன் தரப்பில் வாதம்செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் முடிவடைந்ததையடுத்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதி மன்மோகன் சரீன் வழங்குகிறார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலை 3 மணிக்கு தீர்ப்பளிக்கிறார்சரீன்.
ஆண்டிப்பட்டி தேர்தலை ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு சமீபத்தில்தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications