நாளை பக்ரீத்: தலைவர்கள் வாழ்த்து
சென்னை:
முஸ்லீம்களின் புனிதத் திருநாளான பக்ரீத் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுவதையடுத்து, தமிழகத்தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், அனைவரும் சகோதரத்துவத்தைக்கடைப்பிடித்து அன்புடனும் தேச ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார்.
இருப்பதைப் பகிர்ந்தளிக்கும் மனப்பான்மையை வளர்த்து, சகோதரத்துவத்தை வலியுறுத்திய அண்ணல் நபிகள்நாயகம் கருத்திற்கிணங்க அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் அதிமுகபொதுச் செயலாளருமான ஜெயலலிதா வாழ்த்தியுள்ளார்.
தியாகங்கள் புரிந்து அனைவரும் சமாதானத்துடன் வாழ வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன்தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளரான வைகோ, சமாதான நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைவரும் ஒற்றுமையுடன்வாழ வாழ்த்துவதாகத் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதைப் போவவே பக்ரீத் திருநாளை முன்னிட்டு பல தலைவர்களும் வாழ்த்துக் கூறியுள்ளனர்.