மார்ச் 13க்கு பிறகு பட்ஜெட் கூட்டத் தொடர்: காளிமுத்து
கிருஷ்ணகிரி:
மார்ச் 13க்குப் பிறகு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் என்று தமிழக சட்டசபையின் சபாநாயகர் டாக்டர்காளிமுத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி வந்திருந்த காளிமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டசபைக் கூட்டத் தொடர் வருகின்ற மார்ச் 13க்குப் பிறகு, ஒன்றரை மாத காலத்துக்கு நடக்கும். ஆளுநர்உரைக்குப் பின் ஆரம்பிக்கும் இந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் முதலில் தமிழகத்திற்கான வரவு, செலவு திட்டம்குறித்து விவாதிக்கப்படும்.
திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து கூட்டத்திற்கு வராமலிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்துவிவாதிக்கப்படும்.
கருணாநிதி சட்டசபை கூட்டத்திற்கு வர வேண்டும். அவர் வந்தால் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.அதுவும் இல்லாமல் அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் உட்கார்ந்து பேசவும் அனுமதிக்கப்படும்என்று காளிமுத்து கூறினார்.












Click it and Unblock the Notifications