புதுவையில் பஸ் கட்டண உயர்வு: மார்ச் 1ல் பந்த்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் மார்ச் 1ம் தேதி பந்த் நடத்தப் போவதாக அம்மாநிலமார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் இன்று (சனிக்கிழமை) அறிவித்தன.
பாண்டிச்சேரியில் சமீபத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதைக் கண்டித்து சமீபத்தில் பொது மக்கள் 25க்கும்மேற்பட்ட பஸ்களைச் சிறைபிடித்து வைத்துக் கொண்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் மார்ச் 1ம் தேதி பந்த் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட்மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று அறிவித்துள்ளன.
இந்த பந்த்தில் மற்ற கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அக்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
மேலும் பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து மக்களிடையே விளக்கிக்கூறப் போவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாண்டிச்சேரி மாநிலச் செயலாளர் டி. முருகன் கூறினார்.












Click it and Unblock the Notifications