வெடிகுண்டு புரளி: சென்னை-கொல்கத்தா ரயில் தாமதம்
சென்னை:
சென்னையிலிருந்து கொல்கத்தா சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் கூடூர் ரயில் நிலையத்தைநெருங்கியபோது அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக புரளி கிளம்பியது.
சென்னையிலிருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குக்கிளம்பியது. அந்த ரயில் கூடூர் ரயில் நிலையத்தை நெருங்கியபோது கூடூர் ரயில் நிலைய அதிகாரிக்கு ஒருதொலைபேசி வந்தது.
அதில் பேசியவர், கோரமண்டல் எக்ஸ்பிரஸில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், சிறிது நேரத்தில் அதுவெடிக்கும் என்றும் கூறி விட்டு போனை வைத்து விட்டார்.
இதையடுத்து ரயில் கூடூர் ரயில் நிலையத்தை அடைந்தவுடன் நிறுத்தப்பட்டு, பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.பின்னர் போலீஸார் மற்றும் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர்.
ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. பின்னர் ரயில் கொல்கத்தாபுறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications