தொபுக்கடீர்...தொபுக்கடீர்: அதிமுக ஸ்டைல்
சென்னை:
தனது பிறந்தநாளையொட்டி போயஸ் கார்டனில் அதிமுகவினரை ஜெயலலிதா சந்தித்தார்.
11 மணிக்கு தனது பேவரிட் பச்சை சேலையில் வீட்டுக்கு வெளியே உள்ள வளாகத்துக்கு வந்த ஜெயலலிதாவுக்குமுதல்வர் பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். பின்னர் அம்மா காலில் தொபுக்கடீர் எனவிழுந்து எழுந்து கும்பிட்டார்.
தொடர்ந்து தலைமைச் செயலாளர் சங்கர் வந்து வாழ்த்தினார். அடுத்ததாக அமைச்சர் பொன்னையன் வந்துவாழ்த்தினார். அடுத்ததாக அமைச்சர் தம்பிதுரை தொபுக்கடீர் என விழுந்தார். பின்னர் சபாநாயகர் காளிமுத்துவந்து வாழ்த்தினார்.
அடுத்ததாக வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள அதிரடிப் படையின் தலைவர் தேவாரம், டி.ஜி.பி.நெய்ல்வால் வாழ்த்தினர். தொடர்ந்து வந்த எல்லா அமைச்சர்களும் அவரவர் ஸ்டைலில் விழுந்து கும்பிட்டுவாழ்த்தி ஆசி பெற்றனர்.
சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் விஜய்குமார், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.ஐ. அதிகாரிகளும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத்தெரிவித்தனர். பின்னர் தொண்டர்களும் பொது மக்களும் வாழ்த்துத் தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர்.
அரை மணி நேரம் நின்றவண்ணமே வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. ஆனால், வாழ்த்துதெரிவிக்க வந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்ததால் நாற்காலியில் அமர்ந்து வாழ்த்துக்களைப்பெற்றுக் கொண்டிருக்கிறார்.
இப்போதும் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.