இன்று ரயில்வே பட்ஜெட்: 2ம் வகுப்பு கட்டணம் உயரும்
டெல்லி:
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் நிதிஷ்குமார் இன்று நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல்செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 3வது ரயில்வே பட்ஜெட் ஆகும்.
பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படுவதால், பட்ஜெட்டில் பயணிகள் மற்றும் சரக்குகளின் கட்டணம்கடுமையாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2ம் வகுப்பு பயணிகளின் கட்டணம் 7 முதல் 10 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம்அரசுக்கு 1,000 கோடி ரூபாய் கூடுதலாக வசூலாகும்.
இதே போல் சரக்கு கட்டணங்களை உயர்த்துவது மூலம் 200 முதல் 250 கோடி ரூபாய் வரை திரட்ட முடியும்.
இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் அதிகம் கொண்ட அதிவேக ரயில்களை அறிமுகப்படுத்தவும்திட்டமிடப்பட்டுள்ளது. ஜன சதாப்தி என்ற பெயர்கொண்ட இந்த ரயில்கள் மாநிலத்துக்கு தகுந்தவாறு 1 அல்லது 2அறிமுகப்படுத்தப்படும்.
இது தவிர மொத்தம் 50 புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாக உள்ளதாக ரயில்வேவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.