கேரள கோவிலுக்கு ஜெயா தங்கக் குடம் காணிக்கை
கன்னூர்:
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு ஜெயலலிதா தங்கக் குடத்தைகாணிக்கையாக வழங்கினார்.
கன்னூர் மாவட்டம் தலிப்பரம்பா அருகே உள்ளது இந்தக் கோவில். ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்றதையடுத்துஇந்தக் கோவிலுக்கு அவர் நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் சார்பில் ஆறுமுகம் என்பவர் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தக் குடத்தை வழங்கினார். அப்போதுஜெயலலிதாவுக்காக சிறப்புப் பூஜைகளும் நடத்தப்பட்டன.
சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதா இந்தக் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்திவிட்டுச் சென்றார். கேரளாமாநிலம் பரப்பனன்காடியைச் சேர்ந்த ஜோதிடரான உன்னிகிருஷ்ணன் பணிக்கர் வழங்கிய யோசனைப்படிஜெயலலிதா இந்தக் கோவிலுக்கு வந்து சென்றார்.
அரசியல் வாழ்வில் உள்ள அனைத்து இடர்பாடுகளும் நீங்க இந்தக் கோவிலுக்குச் சென்று வழிபடுமாறு அவர்ஜெயலலிதாவுக்கு யோசனை கூறியிருந்தார். அதன்படி இந்தக் கோவிலில் வழிபட்ட ஜெயலலிதாவுக்கு நீதிமன்றவழக்குகளில் இருந்து விடுதலை கிடைத்தது. ஆண்டிப்பட்டியில் வெற்றியும் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications