ராசிப்படி மார்ச் 2ல் ஜெ. பதவியேற்பு
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனது ராசிப்படி வரும் மார்ச் 2ம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார்.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி பெற்றதையடுத்து சட்டசபை அதிமுக தலைவராக அவர்தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்ச் 2ம் தேதி அவர் பதவி ஏற்பார் என்று திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு ராசியான எண் 9 என்பதால், கூட்டுத் தொகை 9 வரும் வகையில் வரும் மார்ச் 2ம் தேதி காலைபதவி ஏற்க அவருடைய ஜோதிடர் அறிவுறுத்தியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 02.03.2002தேதியின் கூட்டுத் தொகை 9 வருகிறது.
இது தவிர ஆண்டிப்பட்டியின் பெயரை ஆங்கிலத்தில் எழுதினால், அந்த எழுத்துக்களின் கூட்டு எண்ணிக்கை 9என்பதும் ஒரு சிறப்பாக அமைந்துள்ளது.
கடந்த 1991ம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திலேயேஇம்முறையும் பதவியேற்க உள்ளார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்பர் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications