பேரனின் காதல் திருமணம்... கருணாநிதி பெருமிதம்
சென்னை:
காதல் மூலம் கலப்புத் திருமணங்கள் செய்து நம் வாரிசுகள் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனஸ்டாலின் மகன் திருமண நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
ஸ்டாலின் மகன் உதயநிதி-கிருத்திகா காதல் திருமண நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
காதல் திருமணம் என்றாலே 90 சதவீதம் அது கலப்புத் திருமணமாகத் தான் இருக்கிறது. இங்கு நடப்பதும் அதுபோன்ற சாதிக் கலப்புத் திருமணம் தான்.
எங்களால் முடியாததை, நம் தாய் தந்தையால் முடியாததை. சாதிக் கலப்பை, மதக் கலப்பை, மத நல்லிணக்கத்தைநமது வாரிசுகள் உருவாக்கிக் கொண்டிருப்பது பெருமைக்குரியது.
ஆனால், இந்தப் பெருமை முழுவதும் அவர்களுக்குச் சொந்தமானதல்ல. நாம் உரம் போட்டு வளர்த்து உருவாக்கியபகுத்தறிவுப் பயிரின் பயனைத் தான் அவர்கள் அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்.
மேயர் ஸ்டாலினை அவர் கட்டிய பாலங்களை இங்கே பலரும் பாராட்டிப் பேசினர். சென்னையில் அவர் 9பாலங்கள் கட்டினார்.
சில நாட்களாக 10வது பாலமும் (அழகிரி-ஸ்டாலின் ஒற்றுமை) கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பாலம்அமைந்துவிடக் கூடாது என்று எண்ணியவர்கள் எல்லாம் இன்று ஏமாந்து போய் நிற்கின்றனர். இது குடும்பத்துக்கும்சரி கட்சிக்கும் சரி பயன்படும் பாலம் என்றார்.
மணமக்களுக்கு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார்.












Click it and Unblock the Notifications