சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம்
சென்னை:
மத்திய அரசின் ஆட்குறைப்பு, விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்து, சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு அலுவலகங்களில் ஆட்குறைப்பு மற்றும் விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இதை எதிர்த்து தபால்துறை, வருவாய்த்துறை உட்பட பல மத்திய அரசுத்துறை ஊழியர்கள் சங்கங்கள் இன்று(திங்கள்கிழமை) சென்னையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் மத்திய அரசை எதிர்த்து கோஷம்எழுப்பினர்.
இது குறித்து மத்திய அரசு ஊழியர்கள் சங்க தலைவர் ராஜா ஸ்ரீதர் கூறுகையில்,
மத்திய அரசை எதிர்த்து இந்த ஒரு நாள் போராட்டம் ஒரு அடையாளப் போராட்டம் தான். ஆட்குறைப்பு, விருப்பஓய்வுத் திட்டத்தை மத்திய அரசு கை விடவில்லை எனில், நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
இதற்காக மார்ச் 5ல் அகில இந்திய மத்திய அரசு ஊழியர்கள் சங்க கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தகூட்டத்தில் நாடு தழுவிய போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று ராஜா கூறினார்.












Click it and Unblock the Notifications