இந்தியாவில் வறுமை குறைகிறது
டெல்லி:
2000-2001 கணக்கெடுப்பின்படி கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் வறுமைக் கோட்டின் கீழ் இருப்பவர்களின்எண்ணிக்கை 60 மில்லியன் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் நடத்தப்பட்ட எகனாமிக் சர்வே கணக்கெடுப்பு விவரம்:
இந்தியாவில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு வறுமையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 320 மில்லியனாகஇருந்தது. அது இப்போது 260 மில்லியனாக குறைந்துள்ளது. மேலும் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
10வது 5 அம்ச திட்டமாக வேளாண்மைத்துறை, தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதன் மூலம் இந்தஎண்ணிக்கையை மேலும் 5 சதவீதம் குறைக்க முடியும்.
அனைவருக்கும் கல்வி, மருத்துவ வசதி இருந்தால் இந்த சதவிகிதம் மேலும் குறையும்.
மற்ற மாநிலங்களை விட ஒரிசா, பீகார், வடகிழக்கு மாநிலங்களில் தான் வறுமையில் உள்ளவர்களின் எண்ணிக்கைஅதிகமாக உள்ளது.
தமிழகம், கேரளா, ஜம்மு, கோவா, ஆந்திரபிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வறுமையில்உள்ளவர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications