நெல்லையில் பாகிஸ்தான் கொடியை எரித்த கல்லூரி மாணவர்கள் கைது
திருநெல்வேலி:
பாகிஸ்தான் கொடியைத் தீயிட்டு கொளுத்திய கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சதக்கத்துல்லா கல்லூரி உள்ளது. அங்கு கடந்த ஜனவரி 26ம்தேதி கல்லூரி விடுதி வளாகத்தில் இந்திய தேசியக் கொடியை எரித்து, அதற்கு பதிலாக பாகிஸ்தான் கொடியைஏற்றியதாக ஒரு தரப்பு மாணவர்கள் கூறினர்.
தேசியக்கொடி எரிப்புக் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளைவலியுறுத்தி, நேற்று (செவ்வாய்க்கிழமை) பாஜக, ஏ.பி.வி.பி. மற்றும் திருநெல்வேலியில் உள்ள அனைத்துக் கல்லூரிமாணவர்கள் அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆனால் இந்தப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை. இதனால் பாஜகவை சேர்ந்த சில கல்லூரிமாணவர்கள், வண்ணாரப்பேட்டையில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு பாகிஸ்தான் கொடியை தீயிட்டுகொளுத்தினர்.
இதையடுத்து பாகிஸ்தான் கொடியை எரித்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications