For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசுடன் தேவையற்ற மோதலை விரும்பவில்லை: ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய அரசுடன் தேவையற்ற மோதலை அதிமுக விரும்பவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்ஜெயலலிதா இன்று (புதன்கிழமை) கூறினார்.

வரும் மார்ச் 2ம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஜெயலலிதா, இன்று காலை ஆளுநர் ராம்மோகன்ராவைச் சந்தித்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:

பிரச்சனையின் அடிப்படையில்தான் மத்திய அரசை நாங்கள் ஆதரிக்கிறோம். மத்திய அரசுடன் கருத்து வேறுபாடுஏற்படும்போது, அதைச் சுட்டிக் காட்ட நாங்கள் தவறியதில்லை.

மத்திய அரசுடன் எப்போதுமே நாங்கள் தேவையில்லாமல் மோதியது கிடையாது. இனியும் தேவையில்லாமல்அதனுடன் மோத மாட்டோம். நிதி நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்கவும் மத்திய அரசு உதவ வேண்டும்.

எதிர்க் கட்சிகளை அதிமுக உடைக்க முயல்வதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோல பழிசுமத்தும் கீழ்த்தரமானஅரசியலை எதிர்க் கட்சிகள் விட்டுவிட வேண்டும்.

மேலும் தற்போதுள்ள நிதி நெருக்கடியை எதிர்க் கட்சிகள் மனதில் வைத்துக் கொண்டு, எங்களை எதிரிகளாகப்பார்க்காமல் அரசுக்கு தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பைத் தர வேண்டும்.

மக்களே எங்களுக்குத் தெளிவான தீர்ப்பைத் தந்துள்ளபோது, எதிர்க் கட்சிகளும் அதிமுக அரசுக்குத் தங்களுடையஒத்துழைப்பைத் தர முன்வர வேண்டும்.

தமிழகத்தின் புதிய அமைச்சரவைப் பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறது. யார் யாரெல்லாம் புதிய அமைச்சராகஉள்ளனர் என்பதை மார்ச் 2ம் தேதி தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் சபாநாயகராகக் காளிமுத்துவே நீடிப்பார். அவரை மாற்றிவிட்டு அந்த இடத்தில் பன்னீர்செல்வத்தைஅமர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்றார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X