For Daily Alerts
Just In
பாக். மசூதியில் தீவிரவாதிகள் சுட்டு 10 பேர் கொலை
ராவல்பிண்டி:
பாகிஸ்தான்-ராவல்பிண்டியில் உள்ள மசூதிக்குள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை திடீரென்று புகுந்ததீவிரவாதிகள் கண்மூடித்தனமாகச் சுட்டதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
ராவல்பிண்டியில் உள்ள ஒரு மசூதியில் நேற்று மாலை வழக்கம்போல் தொழுதை நடைபெற்றுக் கொண்டிருந்தது.அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 தீவிரவாதிகள் மசூதிக்குள் புகுந்தனர்.
பின்னர் அங்கு தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது அந்தத் தீவிரவாதிகள் சராமாரியாகத் துப்பாக்கியால்சுட்டனர்.
இச்சம்பவத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். காயமடைந்த 15 பேர்களில் ஒருவர்மருத்துவமனையில் கொல்லப்பட்டார்.
இதற்கிடையே சத்தம் கேட்டு மசூதியை நோக்கி மக்கள் ஓடி வரவே, தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிளில் ஏறித்தப்பியோடி விட்டனர்.
இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Comments
Story first published: Wednesday, February 27, 2002, 5:30 [IST]