கள்ளிக்குடி அருகே கார்-லாரி மோதல்: குழந்தை, பெண் உள்பட 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கள்ளிக்குடி:
கள்ளிக்குடி அருகே இன்று (வியாழக்கிழமை) காலை காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருகுழந்தை, ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் திருக்கோட்டியூரைச் சேர்ந்த 12 பேர் ஒரு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்திலிருந்து ஒரு லாரி வேலூருக்குச் சென்று கொண்டிருந்தது.
கள்ளிக்குடி அருகே வந்து கொண்டிருக்கும்போது, இந்த 2 வாகனங்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இவ்விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு குழந்தையும் ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இவ்விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications