For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நக்கீரன் நிருபர் குடும்பத்தினரைக் கைது செய்ய தடை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நக்கீரன் வார இதழ் நிருபர் சிவசுப்ரமணியத்தின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை வரும் திங்கள்கிழமை வரைகைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சிவசுப்ரமணியத்தின் ஆத்தூர் இல்லத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தங்களது பணியைசெய்ய விடாமல் தடுத்ததாக சிவசுப்ரமணியத்தின் மனைவி ஜெயந்தி உள்பட அவரது குடும்பத்தினர் மீது போலீசார்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தங்களைக் கைது செய்யக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயந்தி சார்பில்சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில், போலீஸ் சோதனையின்போது என்னிடம், எனது குடும்பத்தினரிடம் போலீசார் தவறாக நடந்துகொண்டனர். இதுதொடர்பாக ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் நான் புகார் கொடுத்துள்ளேன்.

தவறாக நடந்து கொண்ட போலீஸார் குறித்து விசாரணை நடத்த ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கோர்ட்உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கு முடியும் வரை என்னையோ எனது குடும்பத்தினரையோ போலீசார் கைது செய்யத் தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி சதாசிவம், திங்கள்கிழமை வரை ஜெயந்தி அல்லது அவரது குடும்பத்தினரை கைதுசெய்ய இடைக் காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X